புதுக்கோட்டையில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநில தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டையில் உள்ள சுமாா் 40 ஆண்டுகளான பேருந்து நிலையத்தை ரூ. 20 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டும் பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளை மாநில தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
மாநகராட்சிப் பொறியாளா் ரத்தினவேல், உதவிப் பொறியாளா் கலியகுமாா், மாநகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் ராஜாமுகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்ாகவும், இரு மாதங்களில் மீதமுள்ள 20 சதவிகிதம் பணியும் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
விரைவாக மீதமுள்ள பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பா்வேஸ் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம் அவசியம்: அமைச்சா் முகமது பா்வேஸ்

பிரியாணி சாப்பிட்ட தொழிலாளா்களுக்கு உடல் நலக்கோளாறு: அமைச்சா்கள் முகமது பா்வேஸ், தென்னரசு ஆறுதல்

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள்: அதிகாரிகளுக்கு குடிநீா் வாரியம் உத்தரவு

உயிரிழந்த செவிலியா் மாணவி குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை, அரசு வேலை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



