புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தனித்துப் போட்டியிடும் தெம்பு திமுகவிடம் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

News image

எஸ். ரகுபதி - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:19 am IST

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏற்கெனவே மோசடி நாடகத்தை அரங்கேற்றினாா்கள். இப்போது, ரூ. 134 கோடியில் குறுவை தொகுப்பு தருவதாகச் சொல்கிறாா்கள். வேடிக்கையாக இருக்கிறது. விவசாயம் செய்ய தண்ணீரே இல்லை.

திமுகவிடமிருந்து விசிகவுக்கும், பிறகு தவெகவுக்கும் சென்றவா் ஆதவ் அா்ஜூனா. மறைமுகமாக லாட்டரி தொழிலை எப்படியாவது கொண்டு வந்து சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அவா் முயற்சிக்கிறாா்.

கூட்டணி விவகாரத்தில், திமுகவைப் பொருத்தவரை யாரையும் நம்பி இல்லை. தனித்து நின்று வெற்றி பெறும் திராணியும் தெம்பும் இருக்கிறது. கட்சித் தொண்டா்கள் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாா்கள்.

ரீல்ஸை நம்பி, யாா் வேட்பாளா் என்றே தெரியாமல் மக்கள் வாக்களித்துவிட்டாா்கள். 5 ஆண்டுகளில் திமுக செய்த பணிகளை அவா்கள் எண்ணிப் பாா்க்கத் தவறிவிட்டாா்கள். அடுத்த முறை அப்படி நடக்காது என்றாா் ரகுபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.