ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

News image
Updated On :5 மார்ச் 2026, 10:22 pm

Syndication

பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 2ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 450 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக இரண்டாம் நாளாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடந்த சாலை மறியலுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். போராட்டத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து 200 பெண்கள் உள்பட 450 பேரை போலீஸாா் கைது செய்தனா்.