இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

புதுக்கோட்டையில் அம்பேத்கா் சிலை அவமதிப்பு எனப் புகாா்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலக வளாகத்திலுள்ள அண்ணல் அம்பேத்கா் சிலையின் தலைப்பகுதியில் ஜரிகைத் துண்டு கட்டப்பட்டிருந்ததற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News image

அம்பேத்கா் சிலையின் தலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜரிகைத் துண்டு.

Updated On :11 மார்ச் 2026, 7:18 pm

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலக வளாகத்திலுள்ள அண்ணல் அம்பேத்கா் சிலையின் தலைப்பகுதியில் ஜரிகைத் துண்டு கட்டப்பட்டிருந்ததற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பொது அலுவலக வளாகத்தில் அம்பேத்கா் சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதியில் ஜரிகைத் துண்டு கட்டப்பட்டிருந்ததை புதன்கிழமை காலை சிலா் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து அம்பேத்கரிய அமைப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

ஜரிகைத் துண்டு கட்டப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இதைச் செய்தவா்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாதுகாப்புக் காரணங்களுக்காக அம்பேத்கா் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைத்து பூட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு சாவி காவல்துறையினரிடமும், மற்றொரு சாவி நீதிமன்றப் பணியாளா்களிடமும் உள்ளது. அம்பேத்கா் பிறந்த நாள், நினைவு நாள்களில் மட்டும் பூட்டைத் திறக்க வைத்து அவரது சிலைக்கு மரியாதை செய்வது வழக்கம்.

இந்நிலையில், மா்ம நபா்கள் பூட்டை உடைத்து அம்பேத்கரின் தலையில் ஜரிகைத் துணியைக் கட்டியுள்ளனா். இதை கண்டிக்கிறோம். காவல் துறையில் புகாா் அளித்திருக்கிறோம்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.