மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு மாதா் சங்கத்தினா் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:35 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக அதற்குத் தீா்வு காண வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் பி. சுசிலா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சரண்யா, சுபாஷினி, மாநகரத் தலைவா் விஜி., பொருளாளா் வடிவுக்கரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.