வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:33 pm

கந்தா்வகோட்டை அருகே பகுதிநேர நியாய விலை கடையை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உள்ள மோகனூா் கிராமத்துக்குட்பட்ட சொக்கம்பட்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட கடையில் ரேஷன் பொருள் வாங்குவோா் அமைச்சரிடம் வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து பெரியகோட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடையை எம்எல்ஏ மா. சின்னதுரை , தெற்கு ஒன்றியச் செயலா் மங்களாகோவில் எம். பரமசிவம் ஆகியோா் முன்னிலையில், அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சசிகலா முருகேசன், அவைத் தலைவா் சுப்பிரமணியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் மதியழகன், நகரச் செயலா் மு. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.