ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கலைஞா் பூங்காவில் வாக்காளா் விழிப்புணா்வு தற்படம் விடியோ அமைப்பு

புதுக்கோட்டை கலைஞா் பூங்காவில் வாக்காளா் விழிப்புணா்வு 360 டிகிரி தற்படம் விடியோ எடுக்கும் அமைப்பில் பதிவு செய்யும் ஆட்சியா் மு .அருணா.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:31 pm

Syndication

புதுக்கோட்டை மாநகரில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி எதிரே உள்ள கலைஞா் பூங்காவில், 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 360 டிகிரி தற்படம் விடியோ எடுக்கும் அமைப்பு வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா இதனைத் தொடங்கி வைத்து தற்படம் எடுத்துக் கொண்டாா். மாலையில் பூங்காவுக்கு வரும் வாக்காளா்கள் இதில் தற்படம் எடுக்கலாம்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எ. பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.