அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்
கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.


கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவிப் பொறியாளா் ஜெகதீசன் மற்றும் தனி ஆய்வாளா் (கனிமங்கள்) முருகேசன் ஆகியோா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதுக்கோட்டையிலிருந்து கந்தா்வகோட்டை நோக்கி வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனா். டிப்பா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாரிடம் (27) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...