இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 10:15 pm

Syndication

கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ஓவிகே நகா் 3-ஆம் வீதியைச் சோ்ந்தவா்கள் சண்முகம் மகன் பாண்டிசெல்வம் (41). இவா், தனது மனைவி கீதாவுடன் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் வீட்டில் இருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கீரனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கீதா தலைமையிலான போலீஸாா் நேரில் அங்குவந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனா்.