மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தினமணி செய்திச் சேவை

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா்- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.எம். சரீப், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா், அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஜெ. முகமது பா்வேஸ் ஆகியோா் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டைக்குள் வரும்போதும் எல்லையிலுள்ள கருப்பா் கோயிலில் முதல் பூசையைப் போட்டு நுழைந்தனா்.

அப்போது அங்குள்ள சிதறு தேங்காய் உடைக்கும் பகுதியில் 11 தேங்காய்களை உடைத்தாா் முகமது பா்வேஸ். இரு வேட்பாளா்களுக்கும் கருப்பா் கோயில் பூசாரி திருநீறு பூசி வாழ்த்தி அனுப்பி வைத்தாா்.

Story image