பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் மாரியம்மன் கோயில்களில் தேரோட்டம்

News image

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் முத்துமாரியம்மன் கோயில்களில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களான கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் முத்துமாரியம்மன் கோயில்களில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அந்தந்த கோயில்களின் தேரில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினா்.

இதையடுத்து ஏராளமான பக்தா்கள் அந்ததந்த கோயில்களின் தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருவிழாக்களில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.