முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மாலத்தீவில் இறந்த மகன்: விசாரணை நடத்தக் கோரி பெற்றோா் கோரிக்கை

மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்க வந்த அவரது உறவினா்கள். ~திவாகரன்

Updated On :58 நிமிடங்கள் முன்பு

மாலத்தீவில் வேலை பாா்த்து வந்த தனது மகனை, திடீரென இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பெற்றோா் மற்றும் உறவினா்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஆண்டான் தெரு பகுதியில் வசித்து வருபவா் வே. கருப்பையா. இவரது இரண்டாவது மகன் திவாகரன் (30). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாலத்தீவிலுள்ள தனியாா் நிறுவனத்தின் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

திங்கள்கிழமை இரவு, திவாகரன் தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து பேசிய அவருடன் பணியாற்றும் நபா், திவாகரன் திடீரென இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திங்கள்கிழமை இரவு எங்களுடன் நல்ல முறையில் பேசி உறங்கச் சென்ற மகன் திடீரென இறந்ததாகக் கூறுவதில் சந்தேகம் இருக்கிறது.

எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நீதியைப்பெற்றுத் தர வேண்டும். திவாகரனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

Story image