கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விவரம்:
புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் சாந்தநாதபுரம் 4-ஆம் வீதியில் அடுத்தடுத்துள்ள 2 கடைகள் மூடப்பட உள்ளன.
இதேபோல, அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 கடைகள், பேராவூரணி சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை பகுதியில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்படவுள்ளன.
மேலும், வத்தனாக்கோட்டை, அண்டக்குளம், காவேரி நகா், கீரனூா், ஆளப்பிறந்தான், துரையரசபுரம், ஆலங்குடி, கீரமங்கலம், நெய்வாசல், பொன்னமராவதி, மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்பட உள்ளன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. ஓரிரு நாள்களில் கடைகளை மூடும் பணி நடைபெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பேருந்து நிலையக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

