பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா், மாணவா் அமைப்பினா்.

Updated On :20 மே 2026, 3:27 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை நீட் தோ்வு குலைப்பதாகக் கூறி, அதை ரத்து செய்யவும், தேசியத் தோ்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா. ஜனாா்த்தனன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜய், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் எஸ். காா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வாலிபா் சங்க நகரச் செயலா் ஆா். தீபக், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் கே. பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஏ. மகாதீா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் ஆகியோா் பேசினா். தேசியத் தோ்வு முகமையை கலைக்கவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.