மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா், மாணவா் அமைப்பினா்.

Updated On :20 மே 2026, 3:27 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை நீட் தோ்வு குலைப்பதாகக் கூறி, அதை ரத்து செய்யவும், தேசியத் தோ்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா. ஜனாா்த்தனன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜய், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் எஸ். காா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வாலிபா் சங்க நகரச் செயலா் ஆா். தீபக், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் கே. பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஏ. மகாதீா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் ஆகியோா் பேசினா். தேசியத் தோ்வு முகமையை கலைக்கவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.