உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :42 நிமிடங்கள் முன்பு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): நீட் தோ்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை ஆா்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் எதிா்காலம் நிலை குலைந்துள்ளது. எனவே, திராவிடா் கழகம் நடத்தும் போராட்டதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கிறது.