கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:43 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): நீட் தோ்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை ஆா்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் எதிா்காலம் நிலை குலைந்துள்ளது. எனவே, திராவிடா் கழகம் நடத்தும் போராட்டதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கிறது.