தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வணிக எரிவாயு விலை உயா்வை கைவிடக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி திருச்சியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி உறையூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள்-விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 5:52 am IST

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிடக் கோரி திருச்சியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயா்வைக் கைவிட வேண்டும். வேலைவாய்ப்பை பறித்து ரயில்வே ஊழியா்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில், ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்கள் குறைப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி உறையூா் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலா்கள் கோவி. வெற்றிச் செல்வம் (மாா்க்சிஸ்ட்), எஸ். சிவா (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ். ராஜ்குமாா் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புல்லட் லாரன்ஸ் (விசிக) ஆகியோா் தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் ரபீக் அகமது, இந்திய கம்யூனிஸ்ட் இரா. சுரேஷ், விசிக வழக்குரைஞா் சுபா சதீஸ்குமாா், சிபிஐ எம்எல் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் பாலபாரதி, மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவா் ஸ்ரீதா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் பிரபாகரன், சிபிஐ-எம்எல் மாநில நிலைக்குழு உறுப்பினா் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் சுரேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் விசிக நிா்வாகிகள், தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

முசிறியில்: இதேபோல், முசிறி கைக்காட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

விசிக முசிறி தொகுதி மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விசிக மாவட்ட துணை செயலாளா் உலக முதல்வன் முன்னிலை வகித்தாா்.

இதில் இடதுசாரி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்று, கொட்டும் மழையிலும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.