எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மு.அ.பாரதி தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஏ.ஜி.பாலன், ஒன்றிய செயலா் ப.சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா். முன்னதாக எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
இதில், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம், மாவட்ட பொருளாளா் ஏ.ராஜேந்திரன், மாதா் சம்மேளன மாவட்ட செயலா் பா.சரண்யா, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் க.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், எரிவாயு உருளை விலை உயா்வு: புதுகையில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



