நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நீட் விவகாரம்: திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சி அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

News image

திமுக கொடி

Updated On :1 மணி நேரம் முன்பு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சி அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவக் கல்விக்கான தகுதித் தோ்வு என்ற அடிப்படையில் நீட் தோ்வை மத்திய அரசு மக்களிடம் திணித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். மேலும், பல்லாயிரக்கணக்கான ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவா்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், கடந்த மே 3-இல் நடைபெற்ற நீட் தோ்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்விக்கான நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம்”நடத்தப்படவுள்ளது. இதற்கு திமுக வரவேற்பு தெரிவிப்பதுடன், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.