/
பெட்ரோல், டீசல் விலை உயா்வு, நீட் தோ்வு குளறுபடிகளை கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், நீட் தோ்வில் குளறுபடிகளை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் விமா்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயா்வு: பாஜக விளக்கம்







