முன்னாள்பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக வந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தாா்.
காந்தி பூங்காவில் ஊா்வலம் நிறைவடைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் படத்துக்கு காங்கிரஸாா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.
தொடா்ந்து மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலும் ராஜீவ்காந்தியின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி. முருகேசன், முன்னாள் செயற்குழு உறுப்பினா் கோ.ச. தனபதி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜாமுகமது, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், நகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
முன்னதாக, தமிழக அமைச்சரவையில் நீண்ட காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் காங்கிரஸாா் வெடிவெடித்துக் கொண்டாடினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு தினம்: அரசியல் கட்சியினா், அமைப்பினா் அஞ்சலி

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

கமுதியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

பழனியில் ராஜீவ்காந்தி நினைவு நாள் மெளன ஊா்வலம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



