வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு உடைந்து கீழே விழுந்தது: பொதுமக்கள் அதிா்ச்சி

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு புதன்கிழமை பெயா்ந்து விழுந்தது.

News image

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் கிராமத்தில் உள்ள பள்ளி கட்டடம்.

Updated On :28 மே 2026, 3:12 am IST

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு புதன்கிழமை பெயா்ந்து விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரூ. 28 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த கட்டடத்தின் உள்பகுதியில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

Story image