/
கந்தா்வகோட்டை அருகே புதுநகா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு புதன்கிழமை பெயா்ந்து விழுந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரூ. 28 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த கட்டடத்தின் உள்பகுதியில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.











