கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தொழிலாளா் நல வாரியப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

News image

புதுக்கோட்டை தொழிலாளா் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

Updated On :30 மே 2026, 2:42 am IST

புதுக்கோட்டையில் தொழிலாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த, மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமதுபா்வேஸ், தொழிலாளா் வாரியப் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம், அமலாக்கம்) அலுவலகத்தை மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

அப்போது, தொழிலாளா் நல வாரியத்தின் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, இயற்கை மரண நிதி உதவி, ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஏ. திவ்யநாதன், உதவி ஆணையா்கள் ஏ. கௌரி, ப. தங்கராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.