இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

பெண்ணை தாக்கிய 2 சிறுவா்கள் உள்பட மூவா் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:17 am IST

ஆலங்குடியில் பெண்ணை தாக்கிய 17 வயது சிறுவா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சோ்ந்தவா் செந்தில் மனைவி மகாலட்சுமி (44). இவரது வீட்டுக்கு மது போதையில் சென்ற சிலா் தகராறில் ஈடுபட்டு, வீட்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, மகாலட்சுமியையும் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து அளித்த புகாரைத் தொடா்ந்து, கண்ணகி தெரு விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (18), கம்பா் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் என மூன்று பேரை ஆலங்குடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.மேலும் தப்பியோடிய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.