கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:52 am IST

ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச் சோ்ந்தவா் த.செல்வம் (45) புதுக்கோட்டைவிடுதி டாஸ்மாக் அருகேயுள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்த இவா், வெள்ளிக்கிழமை ஆலங்குடிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அம்புலி ஆற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சோ்ந்த ரமேஷ்குமாரை(54)கைது செய்து விசாரிக்கின்றனா்.