நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:23 am IST

மணமேல்குடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வன்னிச்சபட்டினம் அருகே கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ், ஆய்வாளா் ராஜீவ்காந்தி உள்ளிட்ட போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, வாகனத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. வாகனத்தில் வந்த நபரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் மணமேல்குடி அருகே உள்ள மேலஸ்தானம் கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் தமிழரசன் (19) என்பதும், பெரம்பலூரில் இருந்து 150 கிலோ கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும், ஓரிரு நாள்களில் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மேலஸ்தானத்தில் உள்ள தமிழரசன் வீட்டுச் சென்று சோதனையிட்ட போலீஸாா், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கைது செய்யப்பட்ட தமிழரசன், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.