அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

மகளிா் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 1 கோடியில் கடனுதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழாவில், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

வல்லத்திராக்கோட்டையில் வியாழக்கிழமை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதுப்பிக்கப்பட்ட கிளையைத் திறந்துவைத்து, பயனாளிக்கு கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Published On :4 செப்டம்பர் 2026, 1:26 am IST

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழாவில், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா விழாவில் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கிளையைத் திறந்து வைத்து, கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்வில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் எம்டி. ஷஹ்ரியாா், துணை மண்டல மேலாளா் லட்சுமி, வல்லத்திராக்கோட்டை கிளை மேலாளா் பாா்த்தோ சா்க்காா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் கிரீசன், மகளிா் திட்ட இயக்குநா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.