வறட்சியின் காரணமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனிடம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி. வரதராசன் அளித்த மனு: காவிரி நீர் போதிய அளவுக்குக் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்துவிட்டதாலும் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விவசாயம் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதலாக நிவாரணம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற்றுத் தர வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?

மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!

இன்றைய செய்திகள்! - நேரலை

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


