பேராவூரணி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
பேராவூரணி அரசுக் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து, கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொடக்க விழாவில் எம்.எல்ஏ சி. அருண்பாண்டியன், அதிமுக தொகுதி செயலாளர் மா. கோவிந்தராஜன், ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி அசோக்குமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி. ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் எஸ்.எம். நீலகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குழ.செ. அருள்நம்பி, பேரூராட்சி உறுப்பினர் டாக்டர் மு. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.