மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்ளும்போது, மூலநூலின் மூலக் கருத்தைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தத்துவ மையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி.ந. ராமச்சந்திரன் சைவ சமய அறக்கட்டளைக் கருத்தரங்கத்தில் பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளர் இரா. சுப்பராயலு பேசியது:
மொழிபெயர்ப்பு என்பது முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, மொழிபெயர்க்க வேண்டும். அதைச் செம்மையாகச் செய்பவர் தி.ந. ராமச்சந்திரன். திருமுறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமை கொண்டவர் தி.ந. ராமச்சந்திரன். சைவ சித்தாந்தத்தை மொழிபெயர்க்கும்போது அதற்கென தனிக் கலைச்சொல்களை உண்டாக்கிப் பயன்படுத்தினார்.
மொழிபெயர்ப்பு செய்யும்போது உலகப் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியாக மொழிபெயர்க்க முடியும். மூல நூல்களிலிருந்து மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள கருத்துகள் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். மூலக்கருத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தப் பணியை மிகச் சரியாகச் செய்பவர் தி.ந. ராமச்சந்திரன் என்றார் சுப்பராயலு.
பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தலைமை வகித்தார்.
திருவானைக்கா சைவ சித்தாந்தப் பேராசிரியர் எ. பழனியப்பன், தஞ்சாவூர் சைவ சிந்தாந்தப் பேராசிரியர் வீ. ஜயபால் உள்ளிட்டோர் பேசினர்.
அறக்கட்டளை நிறுவனர் - முதுமுனைவர் தி.ந. ராமச்சந்திரன், கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, தத்துவ மையத் தலைவர் ஜெ. அரங்கசாமி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு: நயினார் குற்றச்சாட்டு
ராவணன் மகன்டா... ஜன நாயகன் ஓடிடி தேதி அறிவிப்பு!

சட்டம் - ஒழுங்கு பற்றி விவாதம்! ஆனால், முதல்வர் விஜய் அவையில் இல்லை! உதயநிதி ஸ்டாலின்

ஆக. 19 வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு...!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


