தண்டந்தோட்டத்தில் நாளை "அம்மா'  திட்ட முகாம்

கும்பகோணத்தை அடுத்த  தண்டந்தோட்டம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) நடைபெறுகிறது. 
Updated on
1 min read

கும்பகோணத்தை அடுத்த  தண்டந்தோட்டம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) நடைபெறுகிறது. 
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
கும்பகோணத்தை அடுத்த தண்டந்தோட்டம் கிராமத்தில் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதில் பிறப்பு, இறப்புச் சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை பெயர் திருத்தம், பட்டா பெயர் மாற்றம், முதல் பட்டதாரி சான்று போன்றவற்றுக்கான மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுத்து, உடனுக்குடன் தீர்வு சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com