புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:49 am

DIN

ஒரத்தநாடு அருகே பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 ஒரத்தநாடு வட்டம் மேலஉளூர், கீழ உளூர், ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு அதைச் சுற்றியுள்ள சுமார் 18 கிராமங்களைச் சேர்ந்த பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தை நம்பி சம்பா நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டது.  தற்போது, பயிர்கள் கதிர் விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாள்களாக பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் முறை வைத்து குறைந்து அளவு தண்ணீர் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் கல்யாண ஓடை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்துவிடக்கோரி அப்பகுதியை சேர்ந்த விவாசயிகள் மேல உளூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த ஒரத்தநாடு டி.எஸ்.பி., பாரதிதாசன், மண்டல துணை வட்டாட்சியர் அகஸ்டியன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜலெட்சுமி, மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.