இறால் பண்ணை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் மீது வழக்கு

அதிராம்பட்டினம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இறால் பண்ணை ஊழியர் எஸ்.காளிதாஸ் (49). இவர் புதன்கிழமை இரவு அதிரை
Updated on
1 min read

அதிராம்பட்டினம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இறால் பண்ணை ஊழியர் எஸ்.காளிதாஸ் (49). இவர் புதன்கிழமை இரவு அதிரை ஈசிஆர் சாலையிலுள்ள குமார் என்பவரின் பெட்டிக்கடை முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தாராம். 
அப்போது பைக்கில் அங்கு வந்த பட்டுக்கோட்டை சாந்தாங்காடு மன்னார் (எ) அருண்சந்தர்,  ஆர்.பிரசாந்த்,  பட்டுக்கோட்டை முடிபூண்டார் நகர் ஜெ.பிரசாந்த் ஆகிய 3 பேரும் கத்தியை காட்டி பணம் கேட்டு காளிதாஸை மிரட்டினராம். அவர் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த 3 பேரும் காளிதாஸ் பைக்கின் முகப்பு விளக்கை கல்லால் அடித்து சேதப்படுத்தி விட்டு,  அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து காளிதாஸ் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com