பாபநாசத்தில்  வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

பாபநாசம் ஆர்டிபி கலை அறிவியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பாபநாசம் ஆர்டிபி கலை அறிவியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பாபநாசம் வட்டாட்சியர் வெங்கடாசலம் தலைமையில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில்,  தேர்தல் துணை வட்டாட்சியர் தர்மராஜன் கலந்து கொண்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் புதிய வாக்களர்கள் சேர்ப்பு பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகள் பட்டியலையும் செயலியில் பதிவு செய்தல், மற்றும் செயலி இயக்கம் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி அளித்தார்.
வருவாய் அதிகாரிகள் பிராங்ளின், மாலா, செல்வம், ராஜேஷ்கிருஷ்ணா,ஜெயமதி,அசோக்குமார் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com