விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காப்பீட்டு கழக ஊழியர்கள் சார்பில் குடந்தையில் கருத்தரங்கம்

காப்பீட்டு கழக ஊழியர் சங்க  கும்பகோணம் கிளை முன்னாள் கோட்டச் சங்க துணைத் தலைவர் ஆர்.கே.என்று அழைக்கப்படும் ஆர்.கருப்பையன் நினைவுதின

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:00 am

DIN

காப்பீட்டு கழக ஊழியர் சங்க  கும்பகோணம் கிளை முன்னாள் கோட்டச் சங்க துணைத் தலைவர் ஆர்.கே.என்று அழைக்கப்படும் ஆர்.கருப்பையன் நினைவுதின சிறப்பு கருத்தரங்கம் கும்பகோணம் ஜனரஞ்சனி மகாலில் தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கருத்தரங்கின் நிகழ்ச்சிக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  கும்பகோணம் கிளை செயலாளர் எச்.கண்ணன் வரவேற்றார். பங்கு விலக்கலும் பொது இன்சூரன்ஸ் துறையும் என்ற தலைப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் சிறப்புரை ஆற்றினார். சமூக போராளி  ஆர்.கே. என்ற தலைப்பில் தஞ்சை கோட்ட தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி கருத்துரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சை கோட்ட இணை செயலாளர் ஏ.சேகர் நன்றிகூறினார். இந்நிகழ்ச்சியில் திரளான காப்பீட்டு  ஊழியர்கள், முகவர்கள் மற்றும்  வளர்ச்சி அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.