காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கட்டடத் தொழிலாளர்கள் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கட்டடத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் தி.கா. ராமஜெயம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே. மதிவாணன் முன்னிலை வகித்தார்.
இதில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீரில்லாத நிலை இருப்பதால் பொதுமக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தை மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எஸ். கலியமூர்த்தி, கும்பகோணம் நகரத் தலைவர் கே. குமார், நகரச் செயலாளர் ஏ. ஆனந்தன் மற்றும் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான் வட்டங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5

கிரிக்கெட்டின் வளர்ச்சியை விட வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎல்: முத்தையா முரளிதரன்

மே மாத எண்கணித பலன்கள் – 4
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

