11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கதுவா பலாத்கார சம்பவத்தை கண்டித்து குடந்தையில் மனிதச்சங்கிலி போராட்டம்

காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து,  கொல்லப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பின் பெண்கள்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:49 am IST

காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து,  கொல்லப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தஞ்சாவூர் மாவட்டத் தலைவி சாஜிதாபானு தலைமை வகித்தார். இதில்,  நம் நாட்டில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளித்திட வேண்டும். நாட்டில் நிகழும் பாலியல் வன்முறைகளை தடுக்க உறுதியான சட்டங்களை இயற்ற வேண்டும். 
காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயலாளர் குடந்தை தமிழினி கண்டன உரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் ஆயிஷாபேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷர்மிளாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.