காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பில் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தஞ்சாவூர் மாவட்டத் தலைவி சாஜிதாபானு தலைமை வகித்தார். இதில், நம் நாட்டில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளித்திட வேண்டும். நாட்டில் நிகழும் பாலியல் வன்முறைகளை தடுக்க உறுதியான சட்டங்களை இயற்ற வேண்டும்.
காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயலாளர் குடந்தை தமிழினி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆயிஷாபேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷர்மிளாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

க்யூட் தேர்விலும் பிரச்சினை: தேர்வர்கள் கடும் அதிருப்தி! என்ன நடந்தது?

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


