உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

பகடிவதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி கலையரங்க வளாகத்தில் பாபநாசம்

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:47 am IST

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி கலையரங்க வளாகத்தில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  பகடிவதை தடுப்பு சட்டம் (ராகிங் தடுப்பு சட்டம்) பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு  புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பாபநாசம்,  மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியும்,  பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான எஸ்.ராஜசேகர் தலைமை வகித்து பகடிவதை தடுப்பு சட்டம் பற்றி விளக்கமளித்தார். 
பின்னர்,  கல்லூரியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு ஆங்கில அகராதி புத்தகங்களை பரிசளித்தார். நிகழ்ச்சியில் பாபநாசம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் என். பாஸ்கரன், செயலாளர் எல்.ஜெயகுமார், அரசு வழக்குரைஞர் ஜி. சரவணன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கல்லூரி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஜி. ராஜதுரை வரவேற்றார். நிறைவில் கல்லூரி வேதியியல் துறை விரிவுரையாளர் ஏ. குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்டபூர்வ தன்னார்வலர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.