அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வெள்ளச் சேத மதிப்பீடு:  அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:13 am IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.
கும்பகோணம் அருகே அணைக்கரை விநாயகர் தெருவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தாழ்வான விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை ஆய்வு செய்தார். 
பின்னர், புதுக்குடி கிராமத்தில் ஆற்றங்கரையோர தாழ்வான விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதைப் பார்வையிட்டார். சேத மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.பின்னர், கும்பகோணம் அருகே குடிதாங்கியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், வீரமாங்குடி ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தையும் பார்வையிட்டார்.
அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) ஏ. ஜஸ்டின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.