நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சிலை திருட்டு வழக்கு:  5 பேருக்கு ஜாமீன்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காணாமல் போன 9 சிலைகளை திருடியதாகக் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு

Updated On :25 டிசம்பர் 2018, 9:47 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காணாமல் போன 9 சிலைகளை திருடியதாகக் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருபுகை கிராமத்தில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ ஆயிரத்துதெட்டு மல்லிநாத ஜினாலயம் என்கிற ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் செப். 15-ம் தேதி கதவு மற்றும் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஐம்பொன்னாலான 9 சிலைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து 8 சிலைகளை மீட்டனர். மேலும் ஒரு சிலையைத் தேடி வருகின்றனர். இந்த சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக மேகநாதன் (35), சுரேஷ் (35), அலிபாட்ஷா (எ) செளக்கத் அலி (24), ராஜசேகர் (27), சந்தானகிருஷ்ணன் (37) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சுரேஷ், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரினர். இவ்வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி இரு நபர் ஜாமீன் பெறுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சுரேஷ், சந்தானகிருஷ்ணன், மேகநாதன், அலிபாட்ஷா, ராஜசேகர் ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாள்தோறும் காலை 10 மணிக்கு 5 பேரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.