கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுபாஷ்சந்திரகபூர் மீதான வழக்கு ஜன. 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 20 சிலைகளும், ஸ்ரீபுரந்தான் பிரகதீசுவரர் கோயிலில் 8 சிலைகளும் திருட்டு போனது. மேலும், விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன் கோயிலில் 2006 ஆம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் காணாமல்போனது. இந்த மூன்று வழக்குகளிலும் அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த மூன்று வழக்குகளும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த விசாரணை ஜன. 7-ம் தேதிக்கு நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









