கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சுபாஷ் சந்திரகபூர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுபாஷ்சந்திரகபூர் மீதான வழக்கு ஜன. 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:46 am IST

கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுபாஷ்சந்திரகபூர் மீதான வழக்கு ஜன. 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 20 சிலைகளும், ஸ்ரீபுரந்தான் பிரகதீசுவரர் கோயிலில் 8 சிலைகளும் திருட்டு போனது. மேலும், விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன் கோயிலில் 2006 ஆம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் காணாமல்போனது. இந்த மூன்று  வழக்குகளிலும் அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த மூன்று வழக்குகளும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த விசாரணை ஜன. 7-ம் தேதிக்கு நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.