தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3 கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கீழ வீதியிலுள்ள திரெளபதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2018, 3:27 am

DIN

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கீழ வீதியிலுள்ள திரெளபதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, மகாலட்சுமி ஹோமங்களும், வாஸ்து சாந்தியும், மிருத்சங்கிராஹணம், புனித நீர் கொண்டு வரும் நிகழ்வும் நடைபெற்றது.  ஜூன் 29, 30 ஆம் தேதிகளில் யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், யாக பூஜைகள், பூர்ணாஹூதியும், அஷ்ட பந்தனம் சாத்துதல் நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜைகள், நாடீசந்தனம், மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானம், கடம் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் விமான கும்பாபிஷேகமும், திரெளபதி அம்மன் பரிவார மூர்த்தங்கள் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.  மாலையில் மகா அபிஷேகமும், இரவு சுவாமி அம்மன் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில்   ஸ்ரீ பிருந்தாம்பிகை  சமேத ஸ்ரீ வில்வாரண்ய ஈஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.  கடந்த வியாழக்கிழமை தொடங்கிய விழாவில்,  ஞாயிற்றுக்கிழமை காலை வரை  ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிவாச்சாரியார்கள் கோயில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூரில்...  தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ அய்யன் சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29 ஆம் தேதி அனுர்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி, நவக்கிரஹ, லட்சுமி ஹோமங்கள், தனபூஜை, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 11 ருத்ரர்களை ஆவாகானம் செய்தல், சாய்பாபாவிற்கு ருத்ர அபிஷேகம், வஸ்த்ர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. ஜூன் 30 ஆம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜையும்,  சுமங்கலி, கன்யா உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன.  ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையும், நாடிசந்தானம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும், தொடர்ந்து விநாயகர் பரிவார கும்பாபிஷேகம், சாய்பாபா மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாய்பாபாவிற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாய்பாபாவை வழிபட்டனர். மாலையில் சந்தனகாப்பு வைபவமும், சத்ய நாராயண பூஜையும், இரவு ஆரத்தி எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.