எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாசிமாத வளர்பிறை சதுர்த்தி: 11 சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

மாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு,  கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் கும்பகோணம் பகுதியில் 11 சிவாலயங்களில்

News image
Updated On :1 மார்ச் 2018, 3:21 am

DIN

மாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு,  கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் கும்பகோணம் பகுதியில் 11 சிவாலயங்களில் உள்ள நடராஜபெருமானுக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சிவாலயங்களில் தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கி திருநடன கோலத்தில் தரிசனம் தரும் நடராஜபெருமானுக்கு மார்கழி மாதத்தில் ஆரூத்ரா அபிஷேகமும், புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் அபிஷேகமும் என நட்சத்திர அடிப்படையில் மூன்றும்,  திதி அடிப்படையில் மூன்றும் மொத்தம் ஆறு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. 
இதன்படி,  புதன்கிழமை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம், திருச்சக்திமுற்றம், தாராசுரம், கூகூர், திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம், திருத்தலையாலங்காடு, அவளிவநல்லூர், நாகை மாவட்டம் திருச்சாய்க்காடு, திருப்பள்ளிசரம், மருதூர், 
திருவிடைக்கழி ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.