பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

செம்பாளூர் பனையக்குளம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிறுவனர் பங்காரு அடிகளாரின்  78-வது பிறந்த நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளூரில் உள்ள

Updated On :21 மே 2018, 1:53 am

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிறுவனர் பங்காரு அடிகளாரின்  78-வது பிறந்த நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளூரில் உள்ள 33 ஏக்கர் பரப்புள்ள பனையக்குளம் ஏரியை தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பி.எஸ்.வாசன் தலைமை வகித்தார். மன்னை ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். ஆம்பல் அண்ணாமலையார்  கோயில் மகேந்திர சுவாமிகள் குத்துவிளக்கேற்றினார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார். 
உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள் ஆம்பல் அப்பாங்கம், கரம்பயம் ஏ.மலையய்யன், ஆலத்தூர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம், ஏ.எம்.ரூஸ்வெல்ட், செம்பாளூர் கலியமூர்த்தி, கால்நடை மருத்துவர் எஸ்.வீரமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
20 நாள்களுக்குள் ரூ. 3 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை செய்து முடிக்க செம்பாளூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.