ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

குறைந்தழுத்த மின்விநியோகத்தை கண்டித்து 5 கிராம மக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே குறைந்தழுத்த மின்விநியோகத்தை கண்டித்து ஐந்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :21 மே 2018, 9:12 pm

கும்பகோணம் அருகே குறைந்தழுத்த மின்விநியோகத்தை கண்டித்து ஐந்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே காகிதபட்டறை, செருகுடி, தரணி, செல்லப்பன்பேட்டை, காவணூர் ஆகிய 5 கிராமங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மோட்டார் சரிவர இயங்காமல் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல, மேற்கண்ட பகுதிகளில் பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வரும் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள், மும்முனை மின்சாரம் இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருவதாகவும், இரவு நேரங்களில் மின்சாரமின்றி மின்சாதனப் பொருள்கள் இயங்காமல் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறைந்தழுத்த மின்விநியோகத்தைக் கண்டித்து மேற்கண்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் காகிதப்பட்டறையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த பந்தநல்லூர் போலீஸார், மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குறைந்தழுத்த மின்விநியோகத்தை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் கும்பகோணம் - மணல்மேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.