அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இ - சேவை மையங்களில் ஓய்வூதியர் அட்டை

தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பொது இ- சேவை மையங்களில் ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறலாம் என மாவட்ட கருவூல அலுவலர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On :25 மே 2018, 4:04 am IST

தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பொது இ- சேவை மையங்களில் ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறலாம் என மாவட்ட கருவூல அலுவலர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் ஏறத்தாழ 30,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்குப் பணப் பலன்கள் கருவூலம் மூலம் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, இ- சேவை மையங்களில் அடையாள அட்டை பெறலாம் என அரசு உத்தரவிட்டது. மேலும், வட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி இ- சேவை மையங்களில் புகைப்படம் மற்றும் ஓய்வூதியப் புத்தகத்தை வழங்கி ரூ. 30 கட்டணம் செலுத்தி அடையாள அட்டைப் பெறலாம்.
ஓய்வூதியர் வாழ்நாள் சான்றுகளை அளிக்க நேர்காணல் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேரில் பங்கேற்க முடியாதவர்கள் ஜீவன் பிரமாண் என்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.