/

கும்பகோணத்தில் சலங்கை அணியும் விழா

கும்பகோணம் அபிநயா பரதநாட்டிய பள்ளி சார்பில் 7 மாணவிகளுக்கு சலங்கை அணியும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 9:20 am IST

கும்பகோணம் அபிநயா பரதநாட்டிய பள்ளி சார்பில் 7 மாணவிகளுக்கு சலங்கை அணியும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் பரதநாட்டியம் கற்றுக் கொண்ட மாணவிகள் எம். சன்மதி, எம். ஆர்த்தி, எம். மோனிகா, டி. ஹரிதா, வி. மௌத்திகா, எஸ். ரதிஸ்ரீ, ஆர். சம்யுக்தா ஆகியோருக்கு குரு வி. விஜயமாலதி சலங்கை அணிவித்தார்.
இதையடுத்து மாலை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன்,  திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் மாணவிகளை வாழ்த்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.