தஞ்சாவூர் மாநகரில் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலப் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூரில் இப்பேரவையின் அக்டோபர் மாதக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மர்ம காய்ச்சல் பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொது சுகாதாரத்தையும், புதை சாக்கடைகள் ஆங்காங்கே சாலையில் ஓடுவதையும், குப்பைகள் குவிந்து காணப்படுவதையும் அறிந்து, அவற்றை அகற்ற உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் பல கிராமங்களில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளின் மின் மோட்டார்கள் இயங்காததால் அவை செயல்படாமல் மக்கள் குடிநீருக்குக் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் தலைவர் அர. தங்கராசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெ. பழனியப்பன், செயலர் மா. பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பி. பன்னீர்செல்வம், ஏ. பிச்சை பிள்ளை, சட்ட ஆலோசகர் வெ. ஜீவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

