கல்வி மாவட்ட அளவிலான இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனர்.
தஞ்சாவூர் பள்ளிக்கல்வித் துறை சார்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.அஸ்மிதா, ஏ. ஆமீனா மரியம் ஆகியோர் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டு, கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டலப் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.
இதையொட்டி, சாதனை புரிந்த 2 மாணவிகளையும் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ.அபுல்ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா மற்றும் ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

