பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சுவாமிமலை தருணகணபதி கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சர்வமான்ய அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள தருண கணபதி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Published On :

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சர்வமான்ய அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள தருண கணபதி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி  விக்னேஸ்வர பூஜை, கோ, திரவ்யாஹூதி பூஜைகளுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து 8 ஆம் தேதி காலை நவக்கிரஹ ஹோமமும்,  மாலை ரக்க்ஷாக்ண ஹோமமும்,  9 ஆம் தேதி காலை மூர்த்தி,  தசா ஹோமமும்,  மாலை வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
இதையடுத்து 10 ஆம் தேதி காலை மகாலட்சுமி ஹோமும்,  தொடர்ந்து காவிரிக்கரையிலிருந்து கடங்களில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்வும் நடைபெற்றது. 11 ஆம் தேதி பாவணா அபிஷேகமும், யாக பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து முக்கிய நிகழ்வாக புதன்கிழமை காலை கடம் புறப்பட்டு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீதியுலா வந்த பின்னர்,  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.