தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் நாகை சாலை சோழன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமி வளர்க்கப்படுவதாக சைல்டு லைன் அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை புகார் வந்தது. இதையடுத்து, தொடர்புடைய வீட்டுக்கு சைல்டு லைன் அமைப்பினர் சென்று அச்சிறுமியை வளர்த்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அச்சிறுமியை அவரது பெற்றோர் தன்னிடம் ஒப்படைத்து வளர்க்கும்படி கூறியதால், வளர்த்து வருகிறேன் என்றார் அவர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அப்பெண்ணிடம் இல்லை.
எனவே, அச்சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிறுமி அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


