அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட  சிறுமி மீட்பு

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:29 am IST

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் நாகை சாலை சோழன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமி வளர்க்கப்படுவதாக சைல்டு லைன் அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை புகார் வந்தது. இதையடுத்து, தொடர்புடைய வீட்டுக்கு சைல்டு லைன் அமைப்பினர் சென்று அச்சிறுமியை வளர்த்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அச்சிறுமியை அவரது பெற்றோர் தன்னிடம் ஒப்படைத்து வளர்க்கும்படி கூறியதால், வளர்த்து வருகிறேன் என்றார் அவர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அப்பெண்ணிடம் இல்லை. 
எனவே, அச்சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிறுமி அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.